செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
ஸ்ரீகாளஹஸ்தி அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள புச்சிநாயுடு கண்டிகை மணடலம் நீர்ப்புகோட்டா கிராமத்தை சேர்ந்தவர் சின்னவீராசாமி (வயது 45), விவசாயி. இவர், நீர்ப்புகோட்டா செங்காலம்மன் கோவில் அருகில் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அவர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதமாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புச்சிநாயுடு கண்டிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மாரெட்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள புச்சிநாயுடு கண்டிகை மணடலம் நீர்ப்புகோட்டா கிராமத்தை சேர்ந்தவர் சின்னவீராசாமி (வயது 45), விவசாயி. இவர், நீர்ப்புகோட்டா செங்காலம்மன் கோவில் அருகில் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அவர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதமாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புச்சிநாயுடு கண்டிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மாரெட்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.