செய்திகள்
மின்தடை

குன்னத்தூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-01-10 14:55 GMT   |   Update On 2021-01-10 14:55 GMT
குன்னத்தூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
குன்னத்தூர்:

குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி பகுதி துணைமின் நிலையங்களில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) இந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னத்தூர், ஆதியூர், தளபதி, காவுத்தாம்பாளையம், கருமஞ்செறை, நவக்காடு, செம்மாண்டம்பாளையம், வெள்ளிரவெளி, 16 வேலம்பாளையம், கணபதிபாளையம், செட்டிகுட்டை, கொமர கவுண்டம்பாளையம், குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News