செய்திகள்
துணிக்கடை உரிமையாளர் தாக்கப்படும் காட்சி.

தாயை பணி நீக்கம் செய்ததால் ஆத்திரம்... கடையின் உரிமையாளரை தாக்கிய மகன்

Published On 2021-06-11 04:04 GMT   |   Update On 2021-06-11 04:04 GMT
புதுச்சேரியில் தாயை பணி நீக்கம் செய்த ஆத்திரத்தில் துணிக்கடை உரிமையாளரை மகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:

வில்லியனூரை சேர்ந்த பாலமுருகன், கோட்டைமேடு பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் வேலை பார்த்த சத்யா என்ற பெண்ணை பாலமுருகன் வேலையை விட்டு அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் மகன் ராம்குமார் தன் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடை உரிமையாளர் பாலமுருகனை தாக்கினார். 

இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் போலீசார் இதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News