லைஃப்ஸ்டைல்
ஷாப்பிங்

இல்லத்தரசிகளின் புத்திசாலித்தனமான ‘ஷாப்பிங்’

Published On 2020-09-12 05:09 GMT   |   Update On 2020-09-12 05:09 GMT
வீட்டிற்கு தேவையான பொருட்களை தேடிப்பிடித்து வாங்குவதற்குள் இல்லத்தரசிகள் மன அழுத்ததிற்கு ஆளாகிவிடுவார்கள்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை தேடிப்பிடித்து வாங்குவதற்குள் இல்லத்தரசிகள் மன அழுத்ததிற்கு ஆளாகிவிடுவார்கள். மற்றவர்கள் வீடுகளில் இருக்கும் பொருட்களை விட சிறந்ததாகவும், நவீனமயமாகவும் தாங்கள் வாங்கும் பொருட்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அது எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவை ஏற்படுத்திவிடும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது பட்ஜெட் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். என்னென்ன பொருட்களை வாங்க போகிறோம், அது எந்த அளவிற்கு வீட்டிற்கு உபயோகமாக இருக்கும் என்பது பற்றி குடும்பத்தினருடன் கலந்தாலோசிக்க வேண்டும். வாங்கும் பொருட்கள் மாதாந்திர பட்ஜெட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தவணை முறையை தேர்ந்தெடுக்கலாம். அதுவும் அதிக மாதங்கள் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. அது வட்டிவிகிதத்தை அதிகப்படுத்தி விடும். சரியான நேரத்தில் பொருட்களை வாங்குவதும் முக்கியமானது. சில பொருட்கள் அந்தந்த பருவ காலங்களுக்குத்தான் தேவைப்படும். அந்த சமயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் சலுகை விலைகளை அறிவிக்கும். அப்போது வாங்குவது புத்திசாலித்தனமானது. விலையும் குறைவாக இருக்கும் என்பதால் பட்ஜெட்டுக்கு பங்கம் நேராது.

கண்களில் தென்படும் அழகழகான பொருட்களை பார்க்கும்போதெல்லாம் அவைகளை வாங்குவதற்கு மனம் ஏங்கும். வீட்டிலேயே வாங்கும் பொருட்களை பற்றி திட்டமிட்டு அதற்கான நிதியை ஒதுக்கிவிட்டுத்தான் நிறைய பேர் கடைக்கு செல்வார்கள். ஆனால் கடைக்கு சென்றதும் கண்ணில்பட்ட பொருட்களையெல்லாம் வாங்கிவிடுவார்கள். அப்போது சிலர் வாங்க நினைத்திருந்த பொருட்களையே மறந்துவிடுவார்கள். அது கடனாளி ஆக்கிவிடும். நிதி திட்டமிடல் என்பது முதலீடு போன்றது. அதனை புரிந்துகொண்டு முறையாக செலவழிக்க வேண்டியது அவசியமானது.
Tags:    

Similar News