செய்திகள்
நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Published On 2021-11-29 18:41 GMT   |   Update On 2021-11-29 18:41 GMT
கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று(செவ்வாய் கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(செவ்வாய் கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News