செய்திகள்
கோப்புபடம்

கடலூர் முதுநகரில் கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது

Published On 2020-10-17 09:44 GMT   |   Update On 2020-10-17 09:44 GMT
கடலூர் முதுநகரில் கஞ்சா விற்க முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் முதுநகர் சிதம்பரம் பிரதான சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர், கடலூர் துறைமுகம் அருகே உள்ள சோனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த திருஞானம் மகன் பிரதீப் (வயது 25) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News