செய்திகள்
தற்கொலை

ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில் வாலிபர் தற்கொலை

Published On 2021-07-24 10:27 GMT   |   Update On 2021-07-24 10:27 GMT
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரத்தநாடு:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த ஒக்கநாடு கீழையூர் மேல தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது33). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள வடுவூர் வடபாதி சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் மகள் இலக்கியா(27) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்றுள்ளனர். இதில் மன உளைச்சலில் இருந்த இலக்கியாவை வடுவூரில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று பார்த்திபன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இலக்கியா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்த்திபனின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எடுத்து சென்றபோது இலக்கியா அவரது உறவினர்களுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News