செய்திகள்
மின்தடை

திண்டுக்கல், செம்பட்டியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-10-19 07:33 GMT   |   Update On 2020-10-19 07:33 GMT
திண்டுக்கல், செம்பட்டியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திண்டுக்கல் :

திண்டுக்கல் பொன்னகரம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி நாளை திண்டுக்கல் ரெயில் நிலையம், நாகல்புதூர், பாரதிபுரம், தொழிற்பேட்டை, மேட்டுபட்டி, தோமையார்புரம், என்.ஜி.ஓ.காலனி மற்றும் புறநகர் பகுதிகளான பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனை மின்வாரியத்தின் திண்டுக்கல் உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் செம்பட்டி துணை மின்நிலையத்திலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி செம்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுபட்டி, உத்தயன்கவுண்டன்பட்டி, கொடைரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதை மின்வாரியத்தின் செம்பட்டி உதவி செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News