செய்திகள்
கொரோனா வைரஸ்

மேகாலயா முன்னாள் கவர்னருக்கு கொரோனா- கோவை ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2021-04-17 12:19 GMT   |   Update On 2021-04-17 12:19 GMT
மேகாலயா மாநிலத்தின் முன்னாள் கவர்னருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை:

தஞ்சாவூரை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது60). இவர் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் கவர்னராக பணியாற்றினார். ஓய்வு பெற்றதும் கோவைக்கு வந்த அவர் இங்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சண்முகநாதனுக்கு காய்ச்சல், சளி போன்றவை இருந்தன. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News