தஞ்சை ஆற்றில் மிதந்த ஆண் பிணம்- போலீசார் விசாரணை
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரத்தில் வெண்ணாறு உள்ளது. இந்த ஆற்றில் இன்று காலை ஒரு ஆண்பிணம் மிதப்பது தெரியவந்தது. ஆற்றின் நடுவில் வளர்ந்துள்ள முட் செடியில் அந்த உடல் சிக்கி கிடந்தது. இதனை கண்ட பொதுமக்கள் தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்து ஆற்றின் நடுவில் சிக்சி கிடந்த ஆண்பிணத்தை கயிறு கட்டி மீட்டனர். பிணமாக கிடந்தவர் ஜட்டி மட்டும் அணிந்துள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவர் குளிக்கும்போது ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்றில் பிணமாக கிடந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? அவரை யாராவது அடித்து கொலை செய்து ஆற்றில் வீசினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள கிராமங்களில் யாராவது மாயமாகி உள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் ஆண்பிணம் மீட்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.