செய்திகள்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது
வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கிய நிலையில் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. அடுத்த மாதம் 6-ந்தேதி மற்றும் 9-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக (அக்டோபர் 6-ந்தேதி மற்றும் 9-ந்தேதி) நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மாலை ஐந்து மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற 25-ந்தேதி கடைசி நாளாகும்.
இதையும் படியுங்கள்... சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா: இன்றைய போட்டி நடைபெறுமா?