செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா காலத்தில் 3.82 லட்சம் பிரசவங்கள்- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-09-15 09:26 GMT   |   Update On 2020-09-15 09:26 GMT
தமிழகத்தில் கொரோனா காலத்தில் 3.82 லட்சம் பிரசவங்கள் நடந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம்  கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. சட்டசபை கூட்டத்தின் 2வது நாளான இன்று தொடர்ந்து நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 3.82 லட்சம் பிரசவங்கள் நடந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,620 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Tags:    

Similar News