செய்திகள்
முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மது- கலால்துறை உத்தரவு
மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் 15 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
புதுச்சேரி:
கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மதுக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்ப பரிசோதனையும் செய்ய வேண்டும்.
கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பேனர் மதுக்கடைகளில் வைக்க வேண்டும். மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் 15 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மதுக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்ப பரிசோதனையும் செய்ய வேண்டும்.
கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பேனர் மதுக்கடைகளில் வைக்க வேண்டும். மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் 15 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.