செய்திகள்
கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் தீ
கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அரிய வகை மூலிகை மரங்களும், செடிகளும் தீயில் கருகின.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து மாலை வேளையில் குளிர் அதிகரிப்பதுடன், உறைபனியும் நிலவுகிறது.
இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு செல்லும் சாலையில் மயிலாடும்பாறை அருகேயுள்ள தோகைவறை என்ற இடத்தில் வனப்பகுதியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பல ஏக்கர் அளவில் காட்டுத்தீ பரவியது.
தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அரிய வகை மூலிகை மரங்களும், செடிகளும் தீயில் கருகின.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து மாலை வேளையில் குளிர் அதிகரிப்பதுடன், உறைபனியும் நிலவுகிறது.
இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு செல்லும் சாலையில் மயிலாடும்பாறை அருகேயுள்ள தோகைவறை என்ற இடத்தில் வனப்பகுதியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பல ஏக்கர் அளவில் காட்டுத்தீ பரவியது.
தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அரிய வகை மூலிகை மரங்களும், செடிகளும் தீயில் கருகின.