செய்திகள்
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூர்:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் விவேக், பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், குழுவினர் 36 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் பிளீச்சிங் பவுடர் போடும் பணி நடைபெற்றது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் போது முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.