செய்திகள்
கொரோனா பரிசோதனை

பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2021-06-06 12:59 GMT   |   Update On 2021-06-06 12:59 GMT
பிள்ளை பெருமாநல்லூர் சுற்றுப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளை பெருமாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தொற்று 2-வது அலை அதிகரித்து வருவதால் சுகாதார துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பிள்ளை பெருமாநல்லூர் சுற்றுப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டக்டர் கார்த்திக்சந்திரகுமார் தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் செவிலியர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News