உள்ளூர் செய்திகள்
கைது

புகையிலை விற்பனை செய்த முதியவர் கைது

Published On 2022-01-25 10:00 GMT   |   Update On 2022-01-25 10:00 GMT
புகையிலை விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் நேற்று கொள்ளுமேடு பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என ஆய்வு செய்தனர். அப்பொழுது ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருப்பு வைத்து விற்பனை செய்ததை கண்டு பிடித்தனர். பின்னர், அந்தக் கடையின் உரிமையாளர் எட்டியப்பன் (வயது 60) என்பவரை கைது செய்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News