செய்திகள்
அசாதுதீன் ஒவைசி

தேர்தல் பரப்புரையில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம்

Published On 2021-07-16 05:21 GMT   |   Update On 2021-07-16 05:21 GMT
உத்தர பிரதேச மாநிலத்தின் பரப்புரை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வழக்கமான கட்சிகளுடன் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட இருக்கிறது.



இந்த நிலையில், பெரும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் எடுக்கப்பட்டது என்றும் ஒவைசி கூட்டத்தில் பங்கேற்க இந்த கூட்டத்தினர் ஒன்று கூடியதாகவும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2019 ஆண்டு வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் 2019 முதல் இணையத்தில் வலம்வந்து கொண்டு இருக்கிறது. இதே புகைப்படம் மும்பையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி கடந்த ஆண்டும் வைரலானது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News