செய்திகள்
தற்கொலை

டி.கல்லுப்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2021-03-03 07:56 GMT   |   Update On 2021-03-03 07:56 GMT
டி.கல்லுப்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எல்.கொட்டாணிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் நாகஜோதி (வயது 21). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகஜோதி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News