திருமங்கலம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருமங்கலம்:
திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள உச்சப்பட்டி, கப்பலூர் ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து சிந்துபட்டி போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. 4 பேரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி, வெண்மதி, நாகராஜ், ராஜவேலு என தெரியவந்தது.
இவர்கள் மின் வாரியத்துக்கு சொந்தமான இரும்புகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 448 மதிப்புள்ள இரும்பு பொருட்கள், 16 ஆடுகள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.