உள்ளூர் செய்திகள்
கோவையில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
3 கிலோ கஞ்சா. ஆட்டோ, கார் பறிமுதல் செய்யப்பட்டது
கோவை:
கோவை வடவள்ளி போலீசார் பி.என்.புதூர் அருகே வாகன சோத¬ ணயில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதணை செய்தனர்.
அதில் அந்த ஆட்டோவில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆட்டோவை ஓட்டி வந்த வீரகேரளத்தை சேர்ந்த ரங்கராஜ் (வயது 60) எனபவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட ரங்கராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்த ப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். இதேபே £ன்று வடவள்ளி போலீசார் அச்சனூர் பிரிவில் வாகன சோதணையில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் கஞ்சா கடத்தி வந்த பி.என்.புதூரை சேர்ந்த சரவணன் (38) மற்றம் ராமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா (22) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்க ளிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர் ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.