செய்திகள்
நிரவி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதல்- வாலிபர் பலி
நிரவி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
திருவாரூர் கீழ்வேளூரை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் மாலை கீழ்வேளூரில் இருந்து காரைக்கால் நகர பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நிரவி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அன்புச்செல்வன் தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்புச்செல்வன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து திருமலைராயன்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்த இடத்தில் கிடைத்த சி.சி.டி.வி. கேமரா பதிவை கொண்டு, மினி வேன் டிரைவர் நாகை மாவட்டம் பாலையூரை சேர்ந்த செல்வராஜ் மகன் ஸ்டீபன் (23) என்பவரை கைது செய்தனர்.