ஆன்மிகம்
அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் வருடாபிஷேக விழா
தஞ்சை விளார் சாலை அண்ணா நகரில் அங்காளஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நிறைவடைந்த முதலாம் ஆண்டையொட்டி வருடாபிஷேக விழா நடந்தது.
தஞ்சை விளார் சாலை அண்ணா நகரில் அங்காளஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு நிறைவடைந்த முதலாம் ஆண்டையொட்டி வருடாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜையும், மகா சங்கல்பமும் நடைபெற்றது. பின்னர் அங்காளஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜையும், மகா சங்கல்பமும் நடைபெற்றது. பின்னர் அங்காளஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.