செய்திகள்
விபத்து பலி

உசிலம்பட்டி அருகே கார் மோதி முதியவர் பலி

Published On 2021-11-19 15:30 GMT   |   Update On 2021-11-19 15:30 GMT
உசிலம்பட்டி அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருணாசலம்பட்டி தெருவை சேர்ந்தவர் பாலகன்(வயது 75). இவர் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் முதியவர் பாலகன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News