செய்திகள்
நிலநடுக்கம்

மிசோரமில் மிதமான நிலநடுக்கம் - 4.6 ரிக்டர் அளவில் பதிவு

Published On 2020-07-05 13:04 GMT   |   Update On 2020-07-05 13:04 GMT
மிசோரமில் இன்று மலை 4.6 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவின் வட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில், மிசோரமின் சம்பால் பகுதியில் இன்று மாலை 5.26 மணியளவில் மிதமான நிலநடுக்கம்
ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது.

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News