உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

காட்டுப்பகுதியில் ஆண் பிணம்

Published On 2022-04-16 08:59 GMT   |   Update On 2022-04-16 08:59 GMT
காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
  
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியை சேர்ந்தவர் இளையராஜா என்கின்ற சின்னதம்பி (வயது 33) கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில் ஆலவயல் மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று காணாமல் போனதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதனை பொன்னமராவதி அருகே மூலங்குடி செட்டிச்சி ஊரணி அருகே காட்டுக்குள் தேடிக் கொண்டிருந்தனர். 

அப்போது வேப்பமரம் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கியபடி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்தது பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் பகுதியை சேர்ந்த இளையராஜா என்கின்ற சின்னதம்பி என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதம்பி த ற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டு சென்றுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News