செய்திகள்
கோப்புபடம்

வத்திராயிருப்பில் இரு சக்கர வாகனம்-ஆட்டோ மோதல்: 5 பேர் படுகாயம்

Published On 2021-04-30 14:46 GMT   |   Update On 2021-04-30 14:46 GMT
வத்திராயிருப்பில் இரு சக்கர வாகனம்-ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு அருகே ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது55). இவர் சுண்ணாம்பு காளவாசல் வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சுந்தரம்மாள் (50). இவர்கள் இருவரும் நேற்று காலை வத்திராயிருப்பில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டு இருந்த போது சுந்தரபாண்டியத்திலிருந்து வத்திராயிருப்பிற்கு வந்து கொண்டிருந்த ஆட்டோ சாலையில் உள்ள பள்ளத்தை விலகி சென்ற போது எதிரே கணேசன் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் கணேசன், சுந்தரம்மாள், ஆட்ேடாவில் வந்த காந்தி (54), மேகலா தேவி (51), ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (22) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கணேசன், சுந்தரம்மாள், மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காந்தி, மேகலா தேவி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News