ஆன்மிகம்
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா
இலந்தையடித்தட்டு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நடந்தது. பக்தர்கள் அனைவரும் கருவறைக்கு சென்று பாலாபிஷேகம் செய்தனர்.
இலந்தையடித்தட்டு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நடந்தது. இந்த விழாவை தர்மபுரம் பஞ்சாயத்து தலைவர் ரெங்கநாயகி கணேசன் தொடங்கி வைத்தார். பக்தர்கள் அனைவரும் கருவறைக்கு சென்று பாலாபிஷேகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஜாண்சிலின் விஜிலா, வார்டு உறுப்பினர் செல்ல பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சக்திபீட தலைவர் மந்திரம் பிள்ளை, உப தலைவர் ருக்மணி முருகேசன், மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் பத்மாவதி மற்றும் பலர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஜாண்சிலின் விஜிலா, வார்டு உறுப்பினர் செல்ல பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சக்திபீட தலைவர் மந்திரம் பிள்ளை, உப தலைவர் ருக்மணி முருகேசன், மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் பத்மாவதி மற்றும் பலர் செய்திருந்தனர்.