செய்திகள்
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்ன வத்தலாபுரத்தைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 70). கூலி தொழிலாளி, இவரது மனைவி சம்பூரணி (62). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
ஊரில் ஓட்டு வீட்டில் குடியிருந்து வந்தனர். நேற்று காலை 8 மணி அளவில் ஆண்டியப்பன் திடீரென மாரடைப்பால் இறந்தார். அவருக்கு இறுதிச் சடங்குகள் நேற்று மாலை நடைபெற்றது. அவரது பூதஉடல் வீட்டைவிட்டு கிளம்பியவுடன் அவரது மனைவி சம்பூரணி மயங்கிக் கீழே விழுந்து இறந்தார்.
கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்தது சின்னவத்தலாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.