செய்திகள்
வேலூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
வேலூர்:
வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, ஆபிசர்ஸ் லைன், கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண் பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், கிராமங்களிலும் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.