செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

40 சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-09-18 05:20 GMT   |   Update On 2020-09-18 07:58 GMT
குழு தந்த அறிக்கை அடிப்படையில் தமிழகத்தில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:

ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

* குழு தந்த அறிக்கை அடிப்படையில் தமிழகத்தில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

* நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

* எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம்.




* சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

* கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

* சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News