செய்திகள்
கொரோனா வைரஸ்

கேரளாவில் ஒரே நாளில் 4,741 பேருக்கு கொரோனா

Published On 2021-11-27 14:02 GMT   |   Update On 2021-11-27 14:02 GMT
கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5,144 பேர் குணம் அடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,741 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 54,309 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 8.72 சதவிகிதமாக உள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5,144 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை  48,501 ஆக குறைந்துள்ளது. இவர்களில் 7.4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News