செய்திகள்
தடுப்பூசி முகாமில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

கிண்டி மடுவங்கரை தடுப்பூசி முகாமில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published On 2021-10-10 09:46 GMT   |   Update On 2021-10-10 09:46 GMT
சென்னையில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் 5-ம் கட்டமாக இன்று நடை பெற்றது. இதில் சென்னையில் 1,800 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

கிண்டி மடுவங்கரையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.


தடுப்பூசி போட வந்தவர்களிடம் விவரங்கள் கேட்டறிந்தார். அவருக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் விளக்கங்கள் அளித்தனர்.

தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படியுங்கள்... மதுரையில் இன்று 5-வது தடுப்பூசி முகாம்: முதல் தவணை செலுத்தியவர்களுக்கு பரிசு மழை

Tags:    

Similar News