ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி விழா

நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி விழா

Published On 2021-10-09 05:44 GMT   |   Update On 2021-10-09 05:44 GMT
நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கொலுவை பார்த்து வணங்கி செல்கிறார்கள். நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

கோவில் சோமவார மண்டபத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின் அடையாளமான கொலு வைக்கப்பட்டு உள்ளது. அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு தினமும் காலை 10.30 மணி அளவில் ஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

காந்திமதி அம்பாள் சன்னதியில் இரவு 7 மணியளவில் லட்சார்ச்சனையும், அதை தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்கள் கொலுவை பார்த்து வணங்கி செல்கிறார்கள். நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.
Tags:    

Similar News