செய்திகள்
கோவில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ள காட்சி

திருவள்ளூர் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2019-07-11 06:15 GMT   |   Update On 2019-07-11 06:15 GMT
திருவள்ளூர் அருகே கோவில் கதவை உடைத்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் வெள்ளி, பித்தளை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருவள்ளூர், ஜூலை. 11-

திருவள்ளூரை அடுத்த கூவம் குமாரசேரி பகுதி யில் மகாசக்தி மாரியம் மன் கோவில் உள்ளது.

நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவிலை மூடி சென்றனர். இன்று காலை பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே இருந்த உண்டியல் மற்றும் பீரோவும் உடைக் கப்பட்டு இருந்தன.

மர்ம நபர்கள் கண் காணிப்பு கேமராவை கருப்புத் துணியால் மூடி விட்டு உண்டியலில் இருந்த சுமார் ரூ. 10 ஆயிரம் மற்றும் பீரோவில் இருந்த சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப் புள்ள வெள்ளி, பித்தளை பொருட்களை கொள்ளைய டித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து தும் மப்பேடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News