தொழில்நுட்பம்
விலை உயர்ந்த ஐமேக் ப்ரோ விற்பனை நிறுத்தம்?
ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் ப்ரோ மாடல்களின் ஸ்டாக் இருக்கும் போதே அவற்றின் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் ப்ரோ விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த கம்ப்யூட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது என்றாலும், ஸ்டாக் தீர்ந்ததும் வலைதளத்தில் இருந்து நீக்கப்படும் என கூறப்படுகிறது. ஐமேக் ப்ரோ மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விற்பனையும் நிறுத்தப்படுகிறது.
இந்தியாவுக்கான ஆப்பிள் வலைதளத்தில் ஐமேக் ப்ரோ ரூ. 4,64,900 விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்தால் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இது வினியோகம் செய்யப்படுகிறது. எனினும், தற்போதைய ஸ்டாக் தீர்ந்தால், மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆப்பிள் வலைதளத்திலும் ஐமேக் ப்ரோ சாதனங்கள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே கிடைக்கும் என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது. தற்போதைய ஐமேக் ப்ரோ மாடலில் 5கே டிஸ்ப்ளே, இன்டெல் சியான் பிராசஸர், ஏஎம்டி வீகா கிராபிக்ஸ், 10 ஜிகாபிட் ஈத்தர்நெட் மற்றும் ஆப்பிள் டி2 சிப்செட் கொண்டிருக்கிறது.