உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் அருகே புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ விசாரணை

Published On 2022-01-15 07:47 GMT   |   Update On 2022-01-15 07:47 GMT
பாண்டி மனைவி ரஞ்சிதாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு உள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் அடுத்த பொங்கலூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் பாண்டி(வயது25). இவருக்கும் ரஞ்சிதா (வயது21) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் பாண்டி மனைவி ரஞ்சிதாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு உள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமான ஒரே ஆண்டில், இளம்பெண் இறந்ததால் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.
Tags:    

Similar News