செய்திகள்
அசாம், மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு
மணிப்பூர் மாநிலத்தின் சாண்டெல் பகுதியில் இன்று அதிகாலை 1.06 மணிக்கு 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி:
அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.04 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும், மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலையில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் வடமாநில மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.