செய்திகள்
லாரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு நண்பர்-ஆத்திரம்
மணிகண்டன் சசிகுமாரின் மனைவியிடம் போனில் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் கோவில்வழி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 55). இவருக்கு சொந்தமாக 5 லாரிகள் உள்ளன. அதனை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் சசிகுமார்.
இந்தநிலையில் மணிகண்டன் சசிகுமாரின் மனைவியிடம் போனில் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையறிந்த சசிகுமார் நேற்றிரவு மணிகண்டன் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. அப்போது ஆத்திரமடைந்த சசிகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை வெட்டினார். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினார்.
காயமடைந்த மணிகண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி சசிகுமாரை கைது செய்தனர்.