செய்திகள்
மாமன்னன் ராஜராஜ சோழன்

சதயவிழா- தஞ்சை பெரிய கோவிலில் முதல் முறையாக தமிழில் வழிபாடு

Published On 2020-10-26 05:27 GMT   |   Update On 2020-10-26 07:12 GMT
தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது.
தஞ்சாவூர்:

தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெறுகிறது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி அவரது சிலைக்கு  கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது.

ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழாவையொட்டி பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவில் முதல்முறையாக தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News