செய்திகள்
சாலை மறியல் போராட்டம் நடந்த காட்சி

வேதாரண்யத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

Published On 2020-01-09 10:38 GMT   |   Update On 2020-01-09 10:38 GMT
வேதாரணயம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியின் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா தாணிக்கோட்டகம் கடை தெருவில் மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார சீரழிவு கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியின் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு விவசாய மாநில செயலாளர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவிசுப்பிரமணியன் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக் குழு வெற்றியழகன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வேணு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தாணிக்கோட்டகம் மற்றும் ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News