செய்திகள்
கொரோனா வைரஸ்

தஞ்சையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

Published On 2021-07-29 10:40 GMT   |   Update On 2021-07-29 10:40 GMT
தஞ்சை மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 846 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 538 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 147 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 65 ஆயிரத்து 452 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது ஆண் ஒருவர் பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 846 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News