செய்திகள்
கோவில் கொள்ளை

திண்டுக்கல் அருகே சாமி சிலைகளை உடைத்து கோவிலில் கொள்ளை

Published On 2019-11-29 06:42 GMT   |   Update On 2019-11-29 06:42 GMT
திண்டுக்கல் அருகே சாமி சிலைகளை உடைத்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே உள்ள மோர்பட்டியில் சீலக்காரி அம்மன், மதுரை வீரன், பட்டை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று இரவு இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான நகையினை திருடியுள்ளனர்.

மேலும் மதுரை வீரன் மற்றும் பட்டை வீரன் சிலைகளை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இன்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி மாரிமுத்து இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் இதே போல் சாமி சிலைகள் உடைக்கப்ட்டது. அதனைத் தொடர்ந்து வேல்வார்கோட்டை பகுதியிலும் சாமி சிலைகள் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து இப்பகுதியில் சாமி சிலைகள் உடைக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி நிர்வாகி சதீஸ் தலைமையில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News