வழிபாடு
கல்ப விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் காட்சி

பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயார்

Published On 2021-12-04 03:38 GMT   |   Update On 2021-12-04 03:38 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை கல்ப விருட்ச வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் ‘ராஜமன்னார்’ அலங்காரத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் காட்சியளித்தார்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் 5-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்தோற்சவம், இரவு தங்க யானை வாகன சேவை நடக்கிறது.
Tags:    

Similar News