தொழில்நுட்பம்
கோப்புப்படம்

இணையத்தில் லீக் ஆன தமிழர்களின் ஆதார் விவரங்கள்

Published On 2021-06-30 11:39 GMT   |   Update On 2021-06-30 11:39 GMT
தமிழ் நாட்டை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

தமிழ் நாட்டின் பொது வினியோக திட்ட விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன. இந்த தகவல்களை பெங்களூரை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசன்ட் தெரிவித்துள்ளது. 



இணையத்தில் லீக் ஆன விவரங்களில் ஆதார் நம்பர், குடும்ப விவரங்கள், மொபைல் நம்பர் என பொது மக்களின் மிகமுக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பயனர் விவரங்கள் லீக் ஆன விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 

தமிழகத்தை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 3,59,485 பேரின் மொபைல் எண்கள், மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் நம்பர்கள் வெளியாகி இருக்கின்றன. இத்துடன் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், உறவு முறை போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன. 
Tags:    

Similar News