தேன்கனிக்கோட்டை அருகே பா.ஜனதா பிரமுகர் வீட்டுக்கு மர்ம கும்பல் தீ வைப்பு
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கோவிந்தப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 30) பாஜக எஸ்.சி.அணி மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இந்திரா நகர் தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஆனந்தன், தனது வீட்டை ஒட்டி 6 சென்ட் நிலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாங்கி உள்ளார். அந்த இடத்தில் தற்காலிகமாக ஓலைக்குடிசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் மர்ம கும்பல், ஆனந்தனின் ஓலைக்குடிசைக்கு தீ வைத்தனர். இதில் தீ மளமள என்று பரவியது.
அப்போது குடிசையில் இருந்த ஆனந்தனின் தாயார் கூச்சல் போட்டார். உடனே சத்தம் கேட்டு ஆனந்தன் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பா.ஜனதா பிரமுகர் வீட்டிற்கு யார் தீ வைத்தது என்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த தீ வைப்பு சம்பவம் நடந்ததா? என்றும் தெரியவில்லை.
இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ஜனதா பிரமுகர் வீட்டுக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.