செய்திகள்
கைது

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2021-01-01 17:58 GMT   |   Update On 2021-01-01 17:58 GMT
தஞ்சை அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த வல்லம்புதூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருடைய மகன் ரமே‌‌ஷ் (வயது27). சாராய வியாபாரி. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக்சேகர் சஞ்சய், கலெக்டர் கோவிந்தராவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் குண்டர் சட்டத்தில் ரமேசை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News