செய்திகள்
விபத்து

குண்டல்பட்டியில் லாரி மீது அரசு பஸ் மோதி 3 பயணிகள் படுகாயம்

Published On 2019-07-24 13:20 GMT   |   Update On 2019-07-24 17:53 GMT
குண்டல்பட்டியில் இன்று லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தருமபுரி:

தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் இன்று காலை கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது குண்டல்பட்டி அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி மீது அரசு பஸ் எதிர்பாராத விதமாக திடீரென மோதியது. உடனே பஸ்சில்  இருந்த பயணிகள் அலறினர். இதில் பஸ்சில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ்சில் முன்பக்க கண்ணாடி மற்றும் மற்ற இடங்களில் உடைந்து சேதம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News