செய்திகள்
கோவையில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை
கோவையில் ரெயில்வே தண்டவாள பகுதியில் 25 வயது மதிக்கதக்க வாலிபர் தலை துண்டான நிலையில் இறந்து கிடந்தார்.
கோவை:
கோவை புரூக் பாண்ட் ரோடு அருகே ரெயில்வே தண்டவாள பகுதியில் 25 வயது மதிக்கதக்க வாலிபர் தலை துண்டான நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த வாலிபர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் இருநஅவரது தலை துண்டான நிலையில் கிடந்தது. இதனையடுத்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.