செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவையாறு பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-30 09:36 GMT   |   Update On 2021-04-30 09:36 GMT
கொரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கொள்ளவும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

திருவையாறு:

திருவையாறு செண்பகபேட்டை தெருவில் 2 பேருக்கும், கீழப்புன வாசலில் ஒருவருக்கும், விளாங்குடியில் ஒருவருக்கும், ஓலத் தேவராயண் பேட்டையில் ஒருவருக்கும், திருச்சோற்றுத் துறையில் ஒருவருக்கும், மேலத்திருப்பூந்துருத்தியில் ஒருவருக்கும் ஆக மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 7 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்த திருவையாறு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று தெருக்கள் முழுவதும் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்தனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கொள்ளவும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள்.

Tags:    

Similar News